மௌன எரிமலைகளின் குமுறலாய்…
ஏளனமாகச் சிரிக்கின்றன
_ இன்னும்
எழுதப்படாத என்
குறிப்பேட்டின் பக்கங்கள்.
சொல்ல முடியாத
வலிகளை _ வெளியில்
சொல்லாமலே இருப்பது
கண்டு.
இன்றும்
அடுக்களைகளுக்குள்
முடக்கப்பட்டும்
அலுவலகங்களுக்குள்
ஒடுக்கப்பட்டும்
அழக்கூடத் தெம்பில்லாத
பெண்கள்;
நாட்டுஓநாய்களும்
நாகரிகவல்லூறுகளும்
நடைப்பிணங்களாக்கிப்
போட்ட
நாக்கு வெளித்தள்ளப்படாத
சவங்கள்.
அன்னை ஜெயலலிதாவே
நம்பிக்கை ஒளிவிளக்காய்
நடுநடுங்க வைக்கும்
கர்ஜனையாய்;
நட்சத்திரங்களாய்
மிளிர்ந்தோம்.
தானே முடிவெடுப்பாள்-எவர்
தலையீடும் களையெடுப்பாள்.
எங்களால் முடியாததைஎல்லாம்
என்றென்றும் சாதித்த
தங்கமகள் .
மிடுக்கும் அதிகார
ஆணைகளும்
மின்னலெனத் தெறிக்கும்
பேச்சும்
பேரியக்கத்தில்
தன்னை நிலைநிறுத்திப்
பேரரசியாய் முடிசூடிக்கொண்ட
சுயம்புஅவள்.
பார்த்துப் பார்த்து
ரசித்திருந்தோம்;
பார்க்கவில்லை
கட்சியை நாங்கள்.
பெண்ணினத்தின்
பிரதிநிதியாய்ப்
பெருமிதங்கொண்டு
களித்திருந்தோம்.
ஆனால் இன்று,
எழுதி முடிக்கப்பட்டது
ஒரு வெற்றிச் சரித்திரம்
எனில் முற்றிலுமாக
என்பதே துக்கம்.
அடுத்தடுத்த அத்தியாயங்கள்
கிடையாது;
அடுத்தவர் எவரும்
உன்போல் முடியாது.
செல்லும் வயதில்லை
உனக்கு _ நீ
சென்றதால்வேறு
வழியில்லை எமக்கு.
செங்குருதி சிந்துமெம்
கண்கள் _ என்றாலும்
செல்லாக்காசாக
மாட்டோம் நாங்கள்.
முன்மாதிரியாய்
நின்று வியக்கவைத்தாய் என்றும்;
முன்னோர்களைத்
தேடிச் சென்றுவிட்டாய் இன்று.
புதைந்துவிட்டாய்
மண்ணிற்குள் விதையாய்; _ நீயே
புத்துணர்வு தருவாய்
மகளிருக்கு உரமாய்.
Romba nallaa irukku, keep it up
ReplyDeleteThank you so much.
Deleteஅருமை தோழமையே
ReplyDeleteநன்றி நண்பரே.
Delete