Tuesday, 6 February 2018

         கவிதை பயிற்றும் முறை 


டாக்டர் ந.சுப்புரெட்டியார், சிறந்த தமிழறிஞர்களுள் ஒருவர்.

அவருடைய எழுத்துகள் எளிமையாக,
மாணவர்களுக்கும் புரியும் அளவில் இருக்கும்.
நிறைய நூல்கள் எழுதியவர்.

நூலகத்தில் இவர் பெயரைப் பார்த்ததும் உள்ளே புரட்டிப் பார்க்காமல்
"கவிதை பயிற்றும் முறை " நூலை
எடுத்து வந்தேன்.

நான் எதிர்பார்த்த மாதிரியே
எளிய சொற்கள் , புரியும்படியான உதாரணங்கள், ஆர்வமூட்டும் உத்திகள்,
நிறைய மேற்கோள்கள், கட்டுரைக் கருத்துடன் அவற்றின் பொருத்தப்பாடு என்று மிக அழகாகப் படைத்திருக்கிறார்.

கவிதையை எப்படி வாசிப்பது என்பதில் தொடங்கி, மொழிப் பாடத்தில் எப்படிப் பட்ட கவிதைகளைச் சேர்க்க வேண்டும் என்பதன் வழியாக நகரும் கட்டுரை, மொழிப் பாட ஆசிரியர்களும் கவிதையைக் கற்பிக்கும் முறை வரை தொடர்கிறது .

கவிதையை அறிமுகம் செய்யும் விதம், படிக்கும் முறை, விளக்கமளித்தல், மனப்பாடம் செய்தல் என எல்லாவற்றையும்
விளக்கியவர், கவிதையின் அழகும் உண்மையும் உணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

பின்னிணைப்பாக,
பயன்பட்ட தமிழ், ஆங்கில நூல்களின் பட்டியல்,
கலைச்சொல் அகராதி மற்றும்
பொருட் குறிப்பு அகராதி ஆகியவை
கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இத்தகைய நல்ல நூலை மனம் விரும்பியும்
தொடர்ந்தும் படிக்க இயலவில்லை.
ஏன்? என்று காரணம் கேளுங்கப்பா.
எண்ணிடலங்கா எழுத்துப் பிழைகளும்,
பல இடங்களில் வந்த சொற்களே அடுத்தடுத்த வரிகளில் அச்சாகி இருப்பதும் கொடுமை.
வாசகனின் மனமொன்றிய வாசிப்பிற்கு இவை நிச்சயம் தடைக் கற்கள் .
இதை ரவி பதிப்பகம் கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும்.

இருப்பினும் படித்து முடித்துவிட்டேன்.
கட்டுரைகள் அனைத்தும் அருமையும் இனிமையும்.

No comments:

Post a Comment