மாண்பமை நீதியரசர் என் கட்டுரைக்குப் பாராட்டு.
8.12. 2017
8.12. 2017
முனைவர் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழாவினை
நலந்தா இலக்கியச் சாளரம் ஆவணப்படுத்தும் பெரும் பேறு பெற்றது.
நலந்தா இலக்கியச் சாளரம் ஆவணப்படுத்தும் பெரும் பேறு பெற்றது.
"தனித்தமிழும் இனித்தமிழும்" கருத்துப் பேழையை மாண்பமை நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் வெளியிட,
வ.சுப.மா.வின் மகள் முனைவர் மா. மாதரி பெற்றுக் கொண்டது,
அவர் தந்தையின் நெஞ்சுக்குகந்த தனித் தமிழுக்குச் செய்த மரியாதை.
வ.சுப.மா.வின் மகள் முனைவர் மா. மாதரி பெற்றுக் கொண்டது,
அவர் தந்தையின் நெஞ்சுக்குகந்த தனித் தமிழுக்குச் செய்த மரியாதை.
கொடைஇமயம் வள்ளல் அழகப்பச் செட்டியாரின் உருவத்தை வாகனங்களிலும் ஒட்டும் படமாக (sticker), தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் முனைவர்.இர.சந்திரமோகன் வெளியிட,
RMS நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு . ஆ.பீட்டர் ராஜா பெற்றுக் கொண்டது காரை மாநகர் வாழ் மக்கள் சார்பாக நன்றிக்கடன் .
RMS நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு . ஆ.பீட்டர் ராஜா பெற்றுக் கொண்டது காரை மாநகர் வாழ் மக்கள் சார்பாக நன்றிக்கடன் .
தன் தந்தையின் குணாதிசயங்களை உணர்வுப்பூர்வ அனுபவங்களுடன் மகள் மாதரி பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியுரை; எந்த நூலிலும் கிடைக்காதது.
தான் ஓர் அரசுப் பள்ளி மாணவன் என்ற பெருமிதத்தோடு தன் சிறப்புரையைத் தொடங்கிய நீதியரசர்,
தான் வழங்கிய 'பாடத்திட்டத்தில் திருக்குறள்' தீர்ப்பிற்கு வித்திட்டது காரைக்குடி மண் என்று வியப்பிலாழ்த்தி,
தமிழின் தொன்மைப் பெருமைகளை விரிவாகச் சான்றுகளுடன் பகர்ந்தது சிறப்பு.
தான் வழங்கிய 'பாடத்திட்டத்தில் திருக்குறள்' தீர்ப்பிற்கு வித்திட்டது காரைக்குடி மண் என்று வியப்பிலாழ்த்தி,
தமிழின் தொன்மைப் பெருமைகளை விரிவாகச் சான்றுகளுடன் பகர்ந்தது சிறப்பு.
அடுத்ததாக, கருத்துப் பேழையில் மூன்று சிறந்த கட்டுரைகளைப் பற்றிக் கூறுகிறேன் என்று சொல்லி,
முதலாவதாக நான் எழுதிய கட்டுரையின் சில வரிகளைச் சொல்லிப் பாராட்டியதோடு, இவை தென்றல் எழுதிய கட்டுரையில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன என்று என் பெயரையும் குறிப்பிட்டு, அயல் நாடுகளில் தாய் மொழி கற்றலின் தீவிரத்தோடு சேர்த்துச் சொல்லி விளக்கியது மகிழ்ச்சி.
முதலாவதாக நான் எழுதிய கட்டுரையின் சில வரிகளைச் சொல்லிப் பாராட்டியதோடு, இவை தென்றல் எழுதிய கட்டுரையில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன என்று என் பெயரையும் குறிப்பிட்டு, அயல் நாடுகளில் தாய் மொழி கற்றலின் தீவிரத்தோடு சேர்த்துச் சொல்லி விளக்கியது மகிழ்ச்சி.




No comments:
Post a Comment