Thursday, 11 January 2018

கவிஞர் சிற்பியின் "மெளன மயக்கங்கள் ".

வைரமுத்து, வாலியைக் கடந்து
சிற்பியின் கதைக்கவிதை உலகில்
வித்தியாசமான காதல் புதுக்கவிதை.

விலைமகளே கதாநாயகியாகவும்
கவிதையின் நாயகியாகவும்
காதலுக்கு மரியாதை செய்பவளாகவும் படைத்திருப்பது
கவிஞரின் சமூக அக்கறையும், துணிவும்.

கதாநாயகனின் எதார்த்த வாதமும்
காதலும் மோகமும்
தவிப்பும் நட்பும்
கவிதையில் கதையில்
பொருத்தமான வெளிப்பாடுகள்.

பாரதிராஜா தன் திரைப்படத்தில்
இளம் விதவைப் பெண்ணுக்கு
மறுமணம் நடத்தி
கிளைமாக்ஸில் கொன்று விடுவார்.
அதுபோல் இறுதியில்
'அவள்' முடிவு நெருடல்.
என்றாலும் கதையோட்டத்திற்கு
அழுத்தம்.

பிடித்த சில பகுதிகள்:

"அழுக்கின் ஒரு துளி தூசும்
படியாத
ஓர் ஆத்மா."

"சிரிப்பும் சிரிப்பும்
பெருக்கெடுக்கும் போது
தரையில் நழுவி விழுந்தது வானம்."

"அம்மா நகைகளை விற்றாள்
அப்புறம் காய்கறி விற்றாள்
தலையில் சுமந்து விறகு விற்றாள்
பிறகு
கற்பை விற்றாள்
எங்களுக்குக்
கால் வயிறு நிரம்பியது."

"மெளனம் என் கேள்வி
மகத்தான மெளனமே உன் பதில்".

படித்து ரசிக்கலாம்.
கோலம் வெளியீடு.


No comments:

Post a Comment