குருதிப்புனல்
சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல்
இந்திரா பார்த்தசாரதி
சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல்
இந்திரா பார்த்தசாரதி
தஞ்சாவூர் மாவட்டம் நான் பிறந்த மண்.
கீழவெண்மணிப் படுகொலை ஆற்றாது
சுடும் வடு.
பொருளாதாரப் போராட்டம்
தீயில் கொளுத்தப்பட்ட பாவத்தின்
பின்னணியில் எழுதப்பட்ட நாவல்.
பாலினப்பிரசினையைப் புகுத்தி எழுத்தாளரின்கற்பனைத் திறன்
எடுத்துக் காட்டப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.
எடுத்துக் காட்டப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.
குருதி என்னும் சொல்லுக்கு விளக்கமும் சான்றும் நன்று.
தலித் மக்களின் உரிமைப் போராட்டமும்,
கிராமத்தினரின் பல்வேறு மனப்போக்குகளும்,
எதற்கெடுத்தாலும் சாதியை முன்னிலைப்படுத்துவதும் ,
பண்ணையாரின் ஆணவப் போக்கும் எனப் பல்வேறு இடங்களில் இந்திரா பார்த்தசாரதியின் தனி நடை இயல்பாகச் சூழலுடன் ஒத்துப் போவது அருமை.
கிராமத்தினரின் பல்வேறு மனப்போக்குகளும்,
எதற்கெடுத்தாலும் சாதியை முன்னிலைப்படுத்துவதும் ,
பண்ணையாரின் ஆணவப் போக்கும் எனப் பல்வேறு இடங்களில் இந்திரா பார்த்தசாரதியின் தனி நடை இயல்பாகச் சூழலுடன் ஒத்துப் போவது அருமை.
கையில் எடுத்தால் கீழே வைக்க இயலாத அளவு விறுவிறுப்பு இல்லை எனினும்
என்னாகுமோ என்ற பதைபதைப்புடன் வாசகனை அழைத்துச் செல்லும் புனைவு இது.
என்னாகுமோ என்ற பதைபதைப்புடன் வாசகனை அழைத்துச் செல்லும் புனைவு இது.
பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல்,
அக்காலத்தில் நிலவிய கிராமத்துச் சூழல் குறித்த தகவல்களுக்காகவும் படிக்கலாம் நண்பர்களே.
அக்காலத்தில் நிலவிய கிராமத்துச் சூழல் குறித்த தகவல்களுக்காகவும் படிக்கலாம் நண்பர்களே.

No comments:
Post a Comment