Sunday, 21 January 2018

மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

I got first prize in a State Level Essay Competition among 543 essays.

திரு.ஜெயம்கொண்டான்,தலைவர்,வள்ளுவர் பேரவை, காரைக்குடி அவர்களுக்கு “இனிய நந்தவனம்” ஜனவரி மாத இதழ் கொடுத்தேன், அதில் எனது க்ட்டுரையைப் பார்த்ததும், “எனக்குப் பிடித்த குறள்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பச் சொன்னார்.நான்கு நாட்களே அவகாசம் தந்தார்.

அங்கிருந்து புறப்பட்ட நொடி முதல், அதைப் பற்றிய சிந்தனையோட்டம். சரி, எழுதுவோம் என முடிவெடுத்தேன்.
சில நிமிடத் தேர்விலேயே கிட்டிய குறள் :
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”.

வழக்கமான எந்தப் பணிகளிலும் தொய்வு விழாமல், கட்டுரையும் எழுதினேன்.பத்துப் பக்கங்கள் எழுதி முடித்ததும் சற்று திருப்தியாய் இருந்தது. உரிய இடத்தில் சேர்ப்பித்தேன்.

திடீரென ஓர் அலைபேசித்தகவல்:
போட்டிக்கு வந்திருந்த 543 கட்டுரைகளில் என் கட்டுரை முதல் 25 ல் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது என.
சனிக்கிழமை (11.02.2017) மாலை பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.

உடல்நலக்குறைவால் என்னைப் பற்றிக் கொண்டிருந்த சோர்வு எங்கோ பறந்து போனது.

விழாவில், 25 ஆம் இடம் பெற்றவர்களில் தொடங்கி, இறங்கு வரிசையாகப் பெயர் வாசிக்கப்பட்டு, பரிசளிக்கப் பட்டது. இரண்டாம் பரிசுக்கான நபரின் பெயர் வாசிக்கப்பட்ட பிறகே, முதல் பரிசு என் கட்டுரைக்கு என்பது தெரிந்து,எனக்குப் புதிதாய்ச் சிறகுகள் முளைத்தன.


அந்த மகிழ்ச்சியுடன் ஏற்புரையும் வழங்கினேன்.
“மாணவர்கள் வீட்டில் அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டலும், வகுப்பில் ஆசிரியர்கள் கூறுவதைச் செவிமடுத்தலும், சமுதாயத்தில் அறிவிலும் அனுபவத்திலும் மூத்த பெரியோர் சொற்கேட்டலும்தான் ஒழுக்கம்” என்று என் கருத்தையும் பதிந்து வந்தேன்.

நல்லதொரு வாய்ப்பினையளித்திட்ட வள்ளுவர் பேரவை சார்ந்த அனைவருக்கும் நன்றிகள்.





No comments:

Post a Comment